Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் ரூ.5லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 200மூட்டைகள் வரத்து வந்தது.
இதில், சுரபி ரகம் ரூ.6409 முதல் ரூ.7335வரையிலும், பி.டி.,ரகம் ரூ.6409 முதல் ரூ.7199வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4105முதல் ரூ.5055 வரையிலும் என மொத்தம் ரூ.5லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
அடுத்த ஏலம், வருகிற 15ல்நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.